144 தடையின் காரணமாக பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கி குவித்த குடிமகன்கள்.
144 தடை உத்தரவு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று மாலையுடன் மூடப்பட்டதால் அதற்கு முன்னதாக மதுபானங்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒன்று கூடுதலை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் பல இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று மதுபானங்களை வாங்கினர் குடிமகன்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள இளையனார் குப்பம், திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளில் மது பிரியர்கள் ஒரு வாரத்திற்குத் தேவையான மதுபானங்களை வாங்கினார். சேலம் மாவட்டம் ஓமலூர், தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில் பலர் பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கி சென்றனர்.