Categories
மாநில செய்திகள்

“பதில் சொல்ல வக்கில்லை”…. அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்த டி.கே.எஸ்.இளங்கோவன்…..!!!!

கடலூரில் பத்திரிகையாளர்களை குரங்கு என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு விமசித்துள்ளார். இதற்கு திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடிக்கிறது’ என்று தமிழிலேயே ஒரு சொலவடை உண்டு. அது தமிழக பாஜக தலைவர் திரு .அண்ணாமலைக்கு முழு பொருத்தமாக இருக்கிறது. அரசியலில் மாற்று கருத்து கொண்டவர்களை அநாகரிக்கமாகவும் தரம் தாழ்த்து வகையிலும் பேசுவது பாஜக நிர்வாகிகள் பலரது வழக்கமாக இருப்பதை ஊடக விவாதங்களில் பங்கேற்கும் கருத்தாளர்களும் பார்வையாளர்களும் நன்கு அறிவார்கள். அதனை தொடர்ந்து கட்சியின் மாநில தலைவர் பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை அந்த அநாகரிக படிக்கட்டுகளில் இன்னும் ஒரு படி மேலே சென்று ஊடகத்தினர் மீது தொடர்ந்து பாச்சலை நடத்தி வருகிறார். ஊடக சந்திப்புகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறும் பாஜக நிர்வாகிகள் அத்தகைய கேள்வி எழுப்புவோரை நோக்கி ஆன்ட்டி-இண்டியன் என்றும் கெட் அவுட் என்றும் கொச்சைப்படுத்துவது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் ஊடகத்தினருக்கு ‘ரேட்’ போடுவதும், ஏலம் விடுவதுமாக பலமுறை இழிவுப்படுத்தியிருக்கிறார்.

அதனைப் போல ‌இன்று மாநிலம் தழுவிய அளவில் விளம்பரம் தேடும் ஆர்ப்பாட்டம் நடத்தி அண்ணாமலையிட ஊடகத்தினர் கேள்வி கேட்டபோது, ‘மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி சுத்தி சுத்தி வாரீங்களே’ என்று மிக மோசமாக விம்சித்ததுடன் ‘உங்களை சாப்பிட சொல்லிட்டுதானே போனேன்’ என்று ஊடகத்தினரின் சுயமரியாதையை சுண்டிப் பார்க்கக்கூடிய வகையில் மேலும் மேலும் கொச்சைப்படுத்தி இருக்கிறார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு வக்கின்றி, நாய், பேய் என்று ஆளும் தரப்பை விமர்சித்துள்ளார். இதனையடுத்து கழகத் தலைவரான முதலமைச்சர் பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசப்படுவார்கள் என்பதை எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியதை இங்கு நினைவு கூர்கிறேன். அரசியல் கட்சிகளிடம் மட்டுமில்லாமல், ஊடகத்தினரிடமும் தரம் தாழ்ந்து பேசும் அண்ணாமலையின் தொடர்ச்சியான வாய் சவுடால் மூலமாக தமிழகத்தின் அரசியல் பயன்பாட்டை சீதைத்து சீரழகி வேலையை பாஜக மேற்கொண்டு வருகிறது. மேலும் ஊடகத்தினரை இழிவு படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக கழகத்தின் சார்பில் கடும் கட்டணத்தை தெரிவித்துக் கொள்வதுடன், தன் செயலுக்கான ஊடகத்தினரிடம் அவர் வருத்தம் தெரிவித்து, இனியாவது நாகரிகமும் பண்பாடும் காத்திட வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |