Categories
உலக செய்திகள்

ராஜபக்சேவின் தம்பி நிதி மந்திரி ஆனார்.. அரச பதவியில் கலக்கும் ராஜபக்சே சகோதரர்கள்..!!

இலங்கையில் ராஜபக்சே சகோதர்களின் இளைய சகோதரரான, பசில் ராஜபக்சே நேற்று நிதி மந்திரியாக பொறுப்பேற்றார்.  

இலங்கை அதிபராக கோட்டபாய ராஜபக்சேவும், பிரதமராக மஹிந்த ராஜபக்சேவும், வேளாண் மந்திரியாக சாமல் ராஜபக்சேவும் இருக்கிறார்கள். இந்நிலையில் ராஜபக்சே சகோதரர்களின் இளைய சகோதரரான, பசில் ராஜபக்சே நேற்று மந்திரியாக பதவியேற்றுள்ளார். அவருக்கு நிதி இலாகா வழங்கப்பட்டிருக்கிறது.

அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு எம்பி பதவி விலகினார். எனவே அதற்கு பதிலாக இவர் எம்.பி ஆனார்.தற்போது இவர் மந்திரி ஆனதால் இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினர் பலம் மேலும் அதிகரித்திருக்கிறது. மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல், சாமல் ராஜபக்சவின் மகன் ஷாசிந்திரா போன்றோரும் மந்திரிகளாக இருக்கிறார்கள். எனவே இவர்களின் குடும்பத்தில் ஏழு நபர்கள் அரசின் உயர் பதவிகளில் உள்ளார்கள்.

Categories

Tech |