ராணிப்பேட்டை அருகே 1 1/2 வயது குழந்தை மூச்சு திணறி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை அடுத்த சின்ன பட்டு கிராமத்தில் வசித்து வரும் தனபால் என்பவரது மகள் திவ்யா ராணி என்பவருக்கும், திருப்பத்தூர் பகுதியில் மட்டுபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிலையில், சென்ற ஆண்டு இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறிய நரேஷ். அதே ஆத்திரத்தில் வெளி நாட்டில் வேலை தேடி அங்கே சென்று தற்போது வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் திவ்யா ராணி தனது ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
நேற்று மாலை தனது குழந்தையை தூங்க வைப்பதற்காக தாய் தட்டிக்கொடுத்து கொண்டிருக்கையில், திடீரென குழந்தை பயங்கரமாக மூச்சி வாங்கியது. குழந்தைக்கு என்ன ஆயிற்று என்று அவர் சோதனை செய்யும் சில நொடிகளுக்குள் குழந்தை மயங்கி விழ அதிர்ந்து போன அவர் உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு ஓடினார். அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தாய் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் தெரிவிக்க பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.