Categories
தேசிய செய்திகள்

மகளிர் விடுதியின் கழிவறையில் குழந்தையின் அழு குரல் ..! விசாரனையில் அதிர்ச்சி..!

மகளிர் விடுதியின் கழிவறையில் இருந்து  பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் துலே பகுதியில் உள்ள மகளிர் விடுதியின்  கழிவறையில் இருந்து  குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டு அங்கு சென்று பார்த்த விடுதி காப்பாளர் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று வாளியில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அதுகுறித்து விடுதி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனால் ஒப்புக்கொள்ள யாரும் முன்வராத    நிலையில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவ்விடுதியில் உள்ள மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஒரு மாணவி மீது சந்தேகம் எழவே போலீசார் அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில்  பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

இந்த பரிசோதனையில், பிறந்த குழந்தை அந்த மாணவியின் குழந்தை தான் என்பது உறுதியானது. 18 வயதான அந்த மாணவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து குழந்தை மற்றும் அந்த மாணவிக்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டது. மேலும் இது குறித்து  போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |