ஏர் இந்தியா விமான நிறுவனம் தனியாருக்கு விற்கப்பட்டாலும், அதன் பெயர் மாற்றப்படாது என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இந்தியர்களை கொரோனா தொற்று பாதித்த சீனாவின் ஊகானில் இருந்து பத்திரமாக மீட்ட ஏர் இந்தியா ஊழியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு கடிதம் வழங்கும் நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது. அதில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனியாருக்கு ஏர் இந்தியாவை விற்கும் போது அதன் பணியாற்றும் ஊழியர்களை குறிப்பிட்ட காலம் வரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் ஏர் இந்தியா (air india) நிறுவனம் தனியாருக்கு விற்கப்பட்டாலும், அதன் பெயர் மற்றும் அனைத்து சேவைகளிலும் எந்த வித மாற்றமும் இன்றி தொடர்வதை அரசு உறுதி செய்யும் என்று கூறினார். இதற்கிடையே அடுத்த நிதியாண்டின் முதல் 6 மாத காலம் முடிவடைவதற்குள் ஏர் இந்தியா விற்கப்பட்டு விடும் என்று மத்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.