Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அவரை உடனடியாக மாற்ற வேண்டும்… ஊழியர்களின் போராட்டம்… சேலத்தில் பரபரப்பு…!!

தாலுக்கா அலுவலகத்தில் ஊழியர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் பகுதியில் தாலுகா அலுவலகம் ஒன்று இயங்கி வருகின்றது. இந்த அலுவலகத்தில் சில ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்கள் பணியை புறக்கணித்து விட்டு சங்க செயலாளர் அர்த்தனாரி தலைமையில் திடீரென அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் தாசில்தாரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த துணை கலெக்டர் விஷ்ணு வர்த்தினி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அப்போது சங்க செயலாளர் அர்த்தனாரி கூறியபோது கொரோனா காலகட்டத்திலும் கூட நாங்கள் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளோம். ஆனால் தாசில்தார் எங்களது பணியில் குறைகளைக் கண்டுபிடித்து ஊழியர்களின் மனம் வருத்தப்படும் படி திட்டி வருகிறார் என்று கூறியுள்ளார்.  இதனால் மிகுந்த வேதனையுடன் எங்களால் பணிபுரிய முடியவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் அவர் தேவையில்லாத காரணத்திற்காக எங்களை அடிக்கடி தொந்தரவு செய்கிறார். அதனால் அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணை கலெக்டர் விஷ்ணு வர்த்தினி என்பவர் தாசில்தாரான  சீனிவாசனிடம் விசாரித்தபோது அவர் ஊழியர் ஒருவரின் சர்வீஸ் புத்தகத்தை சரி பார்த்தபோது சில தவறுகள் இருப்பதை கண்டறிந்து அதனை விபரம் அறிந்த அலுவலரிடம் கொடுத்து சரி செய்து தர வேண்டும் என்று கூறினேன். அதனால்தான் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து துணை கலெக்டர் விஷ்ணுவர்த்தினின் என்பவர் இதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று உறுதியளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து அமைதியாகக் கலைந்து சென்று தங்களின் பணியில் ஈடுபட்டனர்.

Categories

Tech |