பெங்களூரு மாநிலத்தில் ஆட்டோவில் ஒருவர் படுத்து உறங்கியதற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மாநிலம் ராஜ்பால் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் கிரீஸ் மற்றும் சோமு என்பவர் பழைய காகிதங்களைப் பொறுக்கி அதை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவு ஆட்டோவில் படுத்துத் தூங்குவதற்கு கிரீஸ் மற்றும் சோமு இருவரும் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சோமு கல்லால் தாக்கி கிரீசை சரமாரியாக தாக்கி கொலை செய்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து தலைமறைவானார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தலைமறைவாகி உள்ள சோமுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.