Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறு…. 2 பேர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது வீட்டில் வேல்சாமி என்பவர் ஒத்திக்கு இருந்து வருகிறார். இந்நிலையில் பாலசுப்பிரமணியன் வேல்சாமியிடம் வீட்டை காலி பண்ணுமாறு கூறியுள்ளார். இதில் பாலசுப்பிரமணியனுக்கும் வேல்சாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் பாலசுப்பிரமணியன் மற்றும் வேல்சாமி ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |