மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றுள்ளது.
மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற்று ஆடியது. இதற்கான லீக் போட்டிகள் கடந்த 3ஆம் தேதியோடு முடிந்து. இன்று இறுதி போட்டி நடைபெறுகின்றது. இதில் இந்திய அணியும் , நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன. மகளிர் தினமான இன்று நடக்கும் இறுதி போட்டியில் இந்திய அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா ? என்ற எதிர்பாப்பு எழுந்துள்ளது. இறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸிதிரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.