Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா…. ரூ1,33,00,535 காணிக்கை….. பக்தர்கள் பரவசத்தால் நிறைந்த உண்டியல்….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள்  செலுத்திய உண்டியல் காணிக்கை ரூபாய் ஒரு கோடியே 33 லட்சத்து 535 ரூபாய் ஆகும்.

 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த பணியை கோவில் செயலாளர் தலைமை தாங்கி பார்வையிட்டார். இதில் குரு குலதெய்வ பாடசாலை உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்செந்தூர் கோவிலில் நிரந்தர உண்டியலில் ஒரு கோடியே 30 லட்சத்து 531 ரூபாய் ரொக்கமும், ஆங்காங்கே உள்ள சிறு தெய்வங்களின் உண்டியலில் 3 லட்சத்து இரண்டு ரூபாயும் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் தங்கம் ஒரு கிலோ 530 கிராமும், வெள்ளி பொருட்கள் 19 கிலோ 230 கிராமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Categories

Tech |