திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் நாளை முதல் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை 3 மணிக்கு சுப்பிரபாதம் பாடி சாமியை துயிலெழுப்பி, அதன்பின் பூமாலை அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தனம் நடத்தி வருகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் சுப்பிரபாதத்திற்கு பதிலாக ஆண்டாள் பாடிய திருப்பாவை பாசுரங்கள் பாடப்படுவது வழக்கம்.
அதன்படி டிசம்பர் 17 முதல் திருமலையில் சுப்ரபாத சேவை நிறுத்தப்பட்டு திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றன. இன்று போகி பண்டிகையுடன் மார்கழி மாதம் நிறைவடைவதையடுத்து நாளை முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளது.