சொத்து தகராறில் இரண்டு பேரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குத்தாலம் சுவாமிமலை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி கல்யாணி. இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் மூத்த மருமகனின் பெயர் பாண்டியன், இரண்டாவது மருமகன் ஆத்மநாதன், மூன்றாவது மருமகன் பாலசண்முகம்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி பணி ஓய்வுக்குப் பின்னர் வந்த பணத்தை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக மூன்று மருமகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து சம்பவம் நடந்த அன்று கிருஷ்ணமூர்த்தி தனது மூத்த மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை தெரிந்துகொண்ட மற்ற இரண்டு மருமகன்களும் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்,
அப்போது இதனை தடுக்க வந்த மூத்த மருமகனின் தந்தை மற்றும் அவருடைய தம்பி இருவரையும் ஆத்மநாதன், பாலசண்முகம் இருவரும் கத்தியால் குத்தியுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த இருவரையும் அவரது குடும்பத்தினர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து காயமடைந்த இருவரும் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஆத்மநாதன் மற்றும் பாலசண்முகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.