Categories
உலக செய்திகள்

உளவுத்துறைக்கு வந்த ரகசிய தகவல்… இருதரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதல்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் குவெட்டா நகர புறநகர் பகுதியான கில்லி அக்பர்க் பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவல்கள் பயங்கரவாத தடுப்பு படைக்கு பகிரப்பட்டதையடுத்து தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதியை பயங்கரவாத தடுப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இதனையறிந்த தலீபான் பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாத தடுப்பு படையினரும் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இருதரப்பினரிடையே நடந்த இந்த பயங்கர மோதலில் தலீபான் பயங்கரவாதிகளை சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் அந்த அமைப்பின் தலைவர் ரியாஸ் தெகேதர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 2016-ஆம் ஆண்டு குவெட்டா சிவில் மருத்துவமனையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் தளபதி ரியாஸ் தெகேதருக்கு முக்கிய பங்கு உள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |