Categories
உலக செய்திகள்

இருதரப்பினர் இடையே மோதல்…. 37 பேர் பலி…. குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர்….!!

இருதரப்பினருக்கு இடைய நடந்த தாக்குதலில் 37 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஹூடனா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள மடாமி கிராமத்தில் இருக்கும் பழங்குடியினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே சமீப காலமாக மோதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஒரு தரப்பினர் மற்றொருவரின் கிராமத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வன்முறை சம்பவங்கள் அருகிலுள்ள மற்ற கிராமங்களுக்கும் பரவி வருகிறது. இதனால் வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக ஹூடனா மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |