தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் வெளியான கலகலப்பு மற்றும் அரண்மனை திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படம் திரையரங்குகளில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கடந்த 2003-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அன்பே சிவம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன் மற்றும் கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போதுள்ள இளைய தலைமுறையினர் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார். அப்போது அவரிடம் அன்பே சிவம் பார்ட் 2 இயக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுந்தர் சி அன்பே சிவம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் மழையில் நனைந்தபடி குடை பிடித்து சென்று இருப்பார்.
இதுதான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. ஒருவேளை நடிகர் கமல்ஹாசன் ஒப்புக்கொண்டால் கண்டிப்பாக அன்பே சிவம் பார்ட் 2 படத்தை மீண்டும் எடுப்பேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே கலகலப்பு, அரண்மனை உள்ளிட்ட திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். மேலும் அன்பே சிவம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சுந்தர் சி கூறிய தகவலால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.