Categories
உலக செய்திகள்

விமான விபத்தில் 14 பேர் பலி …. கீழே விழுந்து நொறுங்கியது….!!

கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் 14 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொலம்பியா நாட்டில் உள்ள அமேசான் பகுதியில் இருக்கும்  சான் ஜோஸ் டெல் குவாவிரே நகரில் இருந்து வில்லாவிசென்சியோ நகருக்கு TC-3’ ரக பயணிகள் விமானம் கிளம்பியது . இந்த விமானத்தில் 9 பயணிகள் , 2 விமானிகள் மற்றும்  விமான ஊழியர் 3 என பயணம் செய்தனர்.

TC-3’ ரக பயணிகள் விமானம் மேடா மாகாணத்தில் இருக்கும் லா பெண்டிரிசோன் என்ற நகரின் அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, தீடிரென்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த  14 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . மேலும் இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று  உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Categories

Tech |