ராணிப்பேட்டை அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை அடுத்த குக்கிராமத்தை சேர்ந்தவர் ஆரிப் முகமது. இவருக்கும் அரக்கோணம் காஜாமைதீன் என்பவரது மகளான ஹாஜிரா என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணமான 3 மாதத்தில் ஹாஜிரா வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஹாரிஜாவின் தந்தை காஜாமைதீன் எனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க, மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஒருபுறம் காவல் துறையினர் விசாரிக்க, மறுபுறம் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதி உதவி கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.