Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : இந்திய வீரர் சஞ்சீத் தங்கம் வென்றார்…!!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத்  தங்கப் பதக்கத்தை வென்றார்.

இந்த போட்டியில் நேற்று  நடந்த ஆண்களுக்கான (91 கிலோ) எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில்  , இந்திய வீரர் சஞ்சீத் ,ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற கஜகஸ்தான் வீரரான வாசிலி லிவிட்டை , 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். இதுபோல் (52 கிலோ) எடை பிரிவுக்கான இறுதிப்போட்டியில் , நடப்புச் சாம்பியனான இந்திய வீரர் அமித் பன்ஹால் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தான் வீரர் ஷகோபிடின் ஜோய்ரோவிடம் மோதி,  2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.

இந்த முடிவுக்கு எதிராக இந்திய அணி தரப்பிலிருந்து  செய்யப்பட்ட அப்பீல்  நிராகரிக்கப்பட்டது .  (64 கிலோ ) எடை பிரிவின் இறுதிப்போட்டியில் ,இந்திய வீரரான  ஷிவ தபா , மங்கோலியா வீரர் பாதர்சுக் சின்ஜோரிக்கிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து ,வெள்ளிப்பதக்கத்துடன் திரும்பினார் . இதன் மூலம்  ஷிவ தபா தொடர்ந்து  5-வது பதக்கதை வென்றுள்ளார் .இந்த போட்டியில்  மொத்தமாக இந்தியா  15 பதக்கங்களை வென்றுள்ளது.

Categories

Tech |