ஆசிய பளுதூக்கும் போட்டியில் சென்னை வீரர் நவீன் 3 தங்க பதக்கம் மற்றும் 1 வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் .
ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டி துருக்கியில் இஸ்தான்புல் நகரில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த நவீன் 93 கிலோ எடைப் பிரிவு, 330 கிலோ ஸ்குவாட் பிரிவு, 182 கிலோ பெஞ்ச்பரஸ் பிரிவு மற்றும் 305 கிலோ டெட்லிப்ட் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டார் .இந்த நான்கு பிரிவுகளிலும் 3 தங்கப்பதக்கம் , ஒரு வெண்கலம் உட்பட 4 பதக்கங்களை வென்றுள்ளார் .இந்நிலையில் துருக்கியில் இருந்து சென்னை வந்த இந்த நவீனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .
இதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் நவீன் கூறும்போது, “இந்தியாவிலிருந்து 64 பேர் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்றதாகவும், இதில் தமிழகத்திலிருந்து 28 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார் .இதில் 12 பேர் பதக்கம் வென்றுள்ளதாகவும் தெரிவித்தார் .இதனிடையே 2022-ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பங்குபெற்று பதக்கம் வெல்வேன் என்றும் அதற்கு தமிழக முதலமைச்சர் உதவிட வேண்டும் “என்று அவர் கோரிக்கை விடுத்தார்.