Categories
மாநில செய்திகள்

எவ்வளவு வேணுமோ… உடனே கொடுங்க… போட்டோ எடுங்க…. அதிமுக அதிரடி உத்தரவு …!!

நிவர் புயல் தாக்கம் இருப்பதை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

நிவர் புயலின் வெளிச்சுற்று தற்போது கரையை தொட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை 16 மாவட்டத்திற்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக தலைமையகம், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள்  மக்களுக்கு நிவாரணம் வழங்க  உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அன்பிற்குரிய கழக உடன்பிறப்புகளே தமிழகம் முழுவதும் பெரும் மழை பெய்துகொண்டிருக்கிறது.

வலுவான புயல் தமிழகத்தை தாக்க இருக்கிறது இந்த இயற்கை இடர்பாடுகளை நிறைந்த சூழலில் தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுடன் அவர்களுக்கு உடனுக்குடன் உதவிட மாண்புமிகு அம்மா அரசு போர்க்கால அடிப்படையில் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்கிறது. நிவாரணப் பணிகளிலும், மறுவாழ்வு பணிகளிலும் அரசுக்கு துணை நின்று மக்களின் துயர் துடைக்கும் தன்னார்வ பணிகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உடன்பிறப்புகள் முழு மூச்சோடு மேற்கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மக்களுக்காக நாம் மக்களோடு நாம் என்ற தாரக மந்திரத்தை கழகத்தின் இதயத் துடிப்பாக மாற்றிக்காட்டிய இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில் தமிழ்நாடு முழுவதும் புயல் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான சகோதர சகோதரிகளுக்கு நேரடி தேடிச்சென்று அவர்களின் தேவை அறிந்து பணியாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. அந்த பணியை வழக்கம்போல் மகிழ்ச்சியுடனும்,  மன நிறைவுடனும் செய்து முடிப்போம் வாரீர்.

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகள் அனைவரும் உடனடியாக களப்பணியாற்ற அன்பு கட்டளை இடுகிறோம்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவுப் பொருட்களை உடனடியாக வழங்க என்ன செய்ய வேண்டுமோ ? அவை அனைத்தையும் நிறைந்து செய்யுங்கள். எத்தனை வேளை உணவு வேண்டும் என்றாலும் அவற்றை மக்களுக்கு அனைவருக்கும் அளவுக்கு கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.வெள்ளத்தில் ஆடைகளை இழந்தோர் அடிப்படை தேவைகளை இழந்தோர் அனைவருக்கும் கழகத்தின் அன்புக்கரங்கள் விரைந்து உதவட்டும்.

பெய்து வரும் பருவ மழை தாழ்வான பகுதிகளில், கரையோரப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி சூழ்ந்தும் இருக்கும் அந்த தண்ணீரை உடனடியாக வெளியேற்ற மின்மோட்டார் போன்றவற்றை பயன்படுத்தி ஏற்பாடு செய்யுங்கள். புயல் கடந்தும் நிலைமை சரியாக தொடங்கும் வரையில்  செய்யப்படவேண்டம். மறுவாழ்வுப் பணிகளை அக்கறையோடு செய்யுங்கள்.

நம் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை அவர்களோடு இருங்கள். அவர்களுக்கு தேவையானவற்றை  கடமை உணர்வோடு திறம்பட செய்யுங்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகத்தின் சார்பாக வழங்கப்படும் நிவாரண உதவிகள் மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது குறித்து முழு விவரங்களை புகைப்படத்துடன் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |