இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5,991 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,35,205 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 1,33,632 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் முதல்முறையாக குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை சிகிச்சையில் இருப்பவர்களை விட அதிகரித்துள்ளது. தற்போது மீட்பு விகிதம் 48.88% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,76,583 ஆக அதிகரித்துள்ளது.மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,745 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,35,206 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,33,632 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்திருந்தது.