கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு பேரணி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதி.இவர் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் 7_ஆம் தேதி காலமானார். இன்றோடு அவர் மறைவின் முதலாமாண்டு. இதை ஏற்கனவே அனுசரிக்கவேண்டு மென்று திமுக திட்டமிட்டிருந்தது.
அந்தவகையில் கலைஞரின் முதல் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு சென்னையில் தி.மு.க. சார்பில் இன்று அமைதி பேரணி நடைபெறுகின்றது. சென்னையில் வாலாஜா சாலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான பொருளாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எம்.பி.க்களான கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.