மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடகத்துர் பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஓட்டல் உரிமையாளராக இருந்தார். இந்நிலையில் மாதையன் தர்மபுரி- பாலக்கோடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதனால் தூக்கி வீசப்பட்ட மாதையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதையன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .