Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

அரசு அதிகாரிகள் தாமதமாக பணிக்கு வருவதாக புகார் – முதல் அமைச்சர் நாராயணசாமி திடீர் ஆய்வு…!!

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி அதிகாரிகள் உரிய நேரத்தில் பணிக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9 மணிக்குள் செயல்படத் தொடங்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் அதிகாரிகள் தாமதமாக பணிக்கு  வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி ஒரு சில அதிகாரிகள் பணிக்கு வராததால் அது குறித்து கேள்வி எழுப்பியதுடன் அனைத்து துறை அதிகாரிகளும் சரியான நேரத்திற்கு பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் தலைமைச் செயலாளர் உடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர்  நாராயணசாமி அனைத்து அரசு அலுவலகங்களிலும் அதிகாரிகள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருகின்றனரா என ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |