Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

‘அபின்’ போதை பொருள் கடத்தல்…. 5 பேர் கைது….!!

அபின் எனும் போதைப் பொருள் கடத்திய திருச்சியை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ‘அபின்’ எனும் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து தனிப்படையினர் திருச்சி மன்னார்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் அபின் போதை பொருள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் காரில் வந்த இரண்டு பேரையும் விசாரித்தனர். இதில் அவர்கள் பெரம்பலூரை சேர்ந்த அடைக்கலம் மற்றும் ஜெயப்பிரகாஷ் என்பது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெரம்பலூரை சேர்ந்த சித்த மருத்துவர் மோகன் பாபு, ஆறுமுகம், பாலசுப்பிரமணியம் மற்றும் திருச்சி மான் பிடி மங்களத்தை சேர்ந்த அத்துடன் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

ரூ.15 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய 5 பேர் கைது!

அவர்களிடமிருந்து ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அடைக்கலம் மற்றும் ஜெயபிரகாஷ் போதைப்பொருளை தொடர்ந்து விற்பனை செய்து வருவதாக தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 800 கிராம் அபின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 15 லட்சம் ஆகும். பிடிபட்ட 4 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது சித்தமருத்துவருக்கு சொந்தமான அந்த காரை போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஏமாற்றி வாங்கி வந்தது தெரியவந்தது. எனவே சித்த மருத்துவருக்கும் இந்த கடத்தல் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என காவல்துறையினர் முடிவு செய்தனர். இதுதொடர்பாக மேலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்த மருத்துவரை தவிர மற்ற ஐந்து பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.

Categories

Tech |