இந்தியாவில் பிரதமர் மோடி சமீபத்தில் 5ஜி நெட்வொர்க் செய்வதை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நகரங்களில் சோதனை அடிப்படையில் 5g சேவை தொடங்கப்பட்டது. மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது.
மேலும் 5g சேவையை பெற வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 ஜி சேவையை பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் 500 MBPS இருந்து 1GPS என தங்களது நெட்வொர்க் ஸ்பீடை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.