சம்மதமின்றி திருமணம் முடித்ததால் கோபமடைந்த மணமகள் குடும்பத்தினர் மணமகனின் ஆணுறுப்பை துண்டித்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியின் சாகர்பூர் பகுதியில் 22 வயது வாலிபரும், ஒரு பெண்ணும் 3 வருடங்களாக நெருங்கி பழகி உள்ளனர். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு பெண் விட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்பின் ரஜவ்ரி பூங்கா காவல் நிலையத்தில் திருமணம் குறித்த தகவல்களை அளிக்க தம்பதிகள் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்காக வெளியே காத்துக்கொண்டிருந்த மணமகளின் உறவினர்கள் மணமகன் வெளியே வந்தபோது அவரை தூக்கிச் சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.
அப்போது மணப்பெண்ணின் தந்தை, சகோதரர், மாமா போன்றோர் நடத்திய தாக்குதலில் மணமகனின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மணமகனின் ஆணுறுப்பை மணமகளின் குடும்பத்தினர் துண்டித்து விட்டனர். இதன் காரணமாக மணமகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல்துறையினர் கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.