Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடக்கடவுளே.! இப்படியா நடக்கணும் … சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

13 வயது சிறுவனின்  கழுத்தில் ஆணி குத்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ. காலனியில் விஜய்நாயகம்- சுரேகா என்ற  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிவபிரசாத் என்ற 13 வயதுடைய  மகன் இருந்துள்ளார். அவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்   மீது   வீட்டின் சுவற்றில் உள்ள ஆணி சிவபிரசாத்தின்  கழுத்தில் குத்தியுள்ளது. இதில் அவர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிவபிரசாத்தின் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவபிரசாத் எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |