Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அங்கு கம்பி வேலி அமைக்கக்கூடாது…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்…. திருப்பூரில் பரபரப்பு….!!

தீயணைப்புத் துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2015- ஆம் ஆண்டு அவினாசி-மங்கலம் சாலையில் வாடகை கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகில் தீயணைப்பு நிலையத்திற்கு 1 1/2 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இதனிடையில் தீயணைப்பு நிலைய கட்டிட வளாகத்திற்கு கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதனை அறிந்த பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார், அண்ணா பூபதி, ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன், வார்டு உறுப்பினர் சண்முகம் மற்றும் பொதுமக்கள் அங்கு வந்து தீயணைப்பு நிலையம் கட்டும் இடத்திற்கு அருகில் மயானம் இருக்கின்றது என்று தெரிவித்துள்ளனர்.

எனவே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கைகாட்டிபுதூர், கமிட்டியார் காலனி, ராஜன் நகர் போன்ற பகுதி மக்களின் மயானமாக பயன்பாட்டில் உள்ள நிலையில், அங்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள கம்பி வேலியை அகற்ற வேண்டும் என்று தீயணைப்பு துறையினரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தீயணைப்பு துறைக்காக மந்தை புறம்போக்கில் அரசு இடம் ஒதுக்கீடு செய்துள்ளது என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இருதரப்பினர்  இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் ராயப்பன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆவணப்படி அளவீடுகள் சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம நிர்வாக அலுவலர் கூறியதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |