Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பெரும் பரபரப்பு…! பயங்கரவாதிகள் சதி திட்டம்… உளவுத்துறை எச்சரிக்கை…!!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்த சதி செய்ததாக தகவல் வெளியானதால் தீவிரமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் வெற்றி பெற்றதால் கடந்த ஜனவரி 6 ந் தேதி சான்றளிப்பதற்காக நாடாளுமன்றம் ஒன்றுகூடியது .அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். அந்த வன்முறையில் ஒரு போலீஸ் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இது தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மார்ச் 4 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த  சதி செய்வதாக அமெரிக்க போலீசுக்கு நேற்று முன்தினம் உளவுத் தகவல் கிடைத்துள்ளது .

இதுகுறித்து மத்திய புலனாய்வுத்துறை எப் .பி.ஐ.யும், உள்நாட்டு பாதுகாப்பு துறையும் அறிக்கை ஒன்று வெளியிட்டது .அதில் ‘ பிப்ரவரி பிற்பகுதியில் பயங்கரவாத குழுவினர் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவது குறித்தும் அது தொடர்பான திட்டங்கள் குறித்தும்   விவாதித்துள்ளனர்’.மேலும் இந்த தகவலை வாஷிங்டன் கேப்பிடல் போலீசார் உறுதி செய்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில்  மார்ச் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதனால் அங்கு பொதுமக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை காப்பதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டதாக கூறினார் . நேற்று வெளியான இந்த தகவலால் பிரதிநிதிகள் சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

Categories

Tech |