நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் நேற்று சிறிய வகை விமானம் ஒன்று மூன்று பயணிகளுடன் புறப்பட்டு உள்ளது. அந்த விமானம்மானது நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் பயணித்த மூன்று பேரும் சம்பவ இடத்திலே பலியாக்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களை மீட்டுள்ளனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணையை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.