Categories
தேசிய செய்திகள்

மொத்தம் ரூ.34 கோடி……. நிதி திரட்டிய அமெரிக்க வாழ் இந்தியர்கள்…. இந்தியாவிற்கு உதவும் எண்ணம்….!!

கொரோனா பிடியில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு உதவும் வகையில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் தன்னார்வ அமைப்பு ரூபாய் 34 கோடி நிதி திரட்டியுள்ளது.

இந்தியாவின் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் புதிதாக பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனாவின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்பதற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் தன்னார்வ அமைப்பு நிதி திரட்டியுள்ளது. இந்த நிதியானது சுமார் 100 மணி நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது. அவர்கள் திரட்டிய நிதியின் தொகையானது ரூபாய் 34 கோடி ஆகும்.

இந்த நிதியை சுமார் 66700 அமெரிக்க வாழ் இந்தியர்கள் அளித்த உதவியுள்ளனர். இதுகுறித்து அந்த அமைப்பிடம் கேட்டபோது “எங்களால் முடிந்த கூட்டு முயற்சிதான் இது. விலை மதிப்பில்லாத உயிர்களை காப்பாற்றவும் பட்டினியை போக்கவும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவிற்கு உதவ உள்ளோம்” என தெரிவித்துள்ளது. மேலும் சுமார் 2184 ஆக்சிஜன் சிலிண்டர்களை இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |