அமெரிக்கா மனித உரிமை குறித்த பிரச்சினையில், மியான்மர், வடகொரியா, வங்கதேசம் மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
பல நாடுகள் மியான்மரில் மனித உரிமை மீறல் நடந்து வருவதாக குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில், அமெரிக்கா, மியான்மர் மீது பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகளும் மியான்மர் மீது கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
மனித உரிமை நாளிற்காக, அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம், மியானமர் ராணுவ நிறுவனங்கள் மற்றும் வடகொரியா மீது புதிய விதிகளை அறிவித்திருக்கிறது. அமெரிக்கா இவ்வாறு, நடவடிக்கை மேற்கொண்டதற்கு, வடகொரியா, மியான்மர் மற்றும் வங்கதேச தூதரகங்கள் தற்போது வரை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடந்த ஜனநாயகத்திற்கான உச்ச மாநாட்டில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.