Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆம்புலன்சில் வைத்தா…? தாயும்- குழந்தையும் நலம்…. குடும்பத்தினரின் பாராட்டு….!!

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்று ஆண் குழந்தை பிறந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெங்கன்திட்டை விளையில் கணேஷ் என்பவர் ஆட்டோ டிரைவராக வசித்து வருகின்றார். இவருக்கு அனிதா என்ற மனைவியும் 2 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் அனிதா மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை ராஜாக்கமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். இந்நிலையில் நள்ளிரவில் அனிதாவுக்கு பிரசவம் பார்ப்பதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாகர்கோவில் கோட்டார் ஆயுர்வேத மருத்துவமனை அருகில் இருந்த 108 ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் அனிதாவை ஏற்றிக்கொண்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்குமபோது நடு வழியிலேயே அனிதாவுக்கு பிரசவ வலி அதிகமானது. அதன்பின் ஆம்புலன்சில் பெண் மருத்துவ உதவியாளர் கார்த்தியாயினி பிரசவம் பார்த்து அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைதொடர்ந்து தாய்- குழந்தை இருவரும் பின் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமாக இருக்கின்றனர். இவ்வாறு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் கார்த்தியாயினியையும், டிரைவர் ஆன்றோ விதிஷ்ராஜாவையும் அனிதாவின் குடும்பத்தினர் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |