Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்த வாலிபர்… மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை… காஞ்சியில் பரபரப்பு…!!

பூட்டிய வீட்டை உடைத்து மாற்றுத்திறனாளி பெண்ணை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாக மாற்றுத்திறனாளியாக மாறிவிட்டார். இவருடைய தாயார் இவரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த அதே பகுதியில் வசித்து வரும் லாரி டிரைவரான முத்து என்பவர் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று விட்டார். அதன்பின் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து அவரது தாய் வந்ததும் அந்த மாற்றுத்திறனாளி பெண் ஒரு வாலிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என சைகையில் கூறியுள்ளார். இதுகுறித்து பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாயார் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் வீட்டுக்குள் புகுந்து மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததைப் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |