குஜராத் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், வதோதராவின் பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என சொல்லி குடும்பநல நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதில் தனது மனைவி குடும்பத்தோடு சேர்ந்து வாழ ஒத்துழைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அந்த மனுவில் திருமணத்தின்போது தனது மனைவி மாதவிடாய் என்பதை என்னிடமும், என் தாயிடம் வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
திருமணம் முடிந்து கோயிலுக்கு புறப்படும் தான் தங்களிடம் மனைவி உண்மையைக் கூறினார். இதனால் எனது குடும்பத்தின் மத உணர்வு புண்பட்டு விட்டது, தெய்வ குத்தம் ஏற்பட்டு விட்டதாகவும் கூறி விவாகரத்து கேட்டுள்ளார். இந்த விவாகரத்து வழக்கு சமூக செயற்பாட்டாளர்களிடம் பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது பெண்களிக்கு அளிக்கப்பட்ட அநீதி என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.