Categories
தேசிய செய்திகள்

100%…. இனி அனைத்து வங்கியிலும்….. எல்லாமே POSSIBLE….. அதிரடி அறிவிப்பு…!!

வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு இனி வரக்கூடிய காலங்களில் அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு சட்டம் கடுமையாக அமல் படுத்தப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் முதல் பல மாநிலங்களில் ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி,பல தொழில் நிறுவனங்கள் இயங்க தொடங்கியுள்ளன .

அரசு நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் கீழ் ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில், அந்த சதவீத எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அனைத்து வங்கிக் கிளைகளும் 100% ஊழியர்களுடன் செயல்படுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளும் மீண்டும் வழங்கப்படும் என மாநில வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேவைப்படும் இடங்களில் நடமாடும் ஏடிஎம் மூலமாக பணம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |