Categories
தேசிய செய்திகள்

ALERT: பென்ஷன் வாங்குபவர்களே மறந்துராதீங்க…. பிப்-28 தான் கடைசி….

பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பென்ஷன் வாங்கும் அனைவரும்  ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பென்ஷன் வாங்கும் ஒவ்வொரு முத்து குடிமக்களுக்கும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30ம் தேதிக்குள் தங்களது வங்கிக் கிளைக்கு சென்று ஓய்வூதியர்களின் ஆய்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதனை செய்யாவிட்டால் அவர்களின் பென்ஷன் பணம் கிடைக்காது. கடைசியாக வழங்கப்பட்ட கால அவகாசத்தில் படி அனைத்து ஓய்வூதியதாரர்களும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் தங்களால் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

இதனை https://jeevanpramaan.gov.in/ என்ற வெப்சைட்டில் சென்று சமர்ப்பிக்கலாம்.இதனை சமர்ப்பிக்க  ஜீவன்பிரமன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் கைரேகை சாதனமும் இருக்கவேண்டும் அதன் பின்னர் ஸ்மார்ட்போன், மின்னஞ்சல் ஐடி, போன்ற விவரங்களை கொடுத்து வீட்டில் இருந்தே  ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். மேலும் மத்திய அரசிடம் ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த சான்றிதழை வங்கி கிளைகளில் நேரடியாக சென்று நேரடியாகவோ அல்லது டிஜிட்டல் முறையில் ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கலாம்.

வங்கிகளுக்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள் வங்கிகளின் சேவை மூலமாக சமர்பிக்கலாம் மேலும் தற்போது ஓய்வூதியம் பெறுவோர் 12 பொதுத்துறை வங்கிகளின் டோர் ஸ்டேப்  சேவையை பயன்படுத்தி சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.இந்தியன் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பேங்க் ஆஃப் பரோடா (BoB), பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் இந்தச் சேவைகள் உள்ளன.

Categories

Tech |