Categories
மாநில செய்திகள்

ALERT : திசை மாறும் ‘அசானி புயல்’….. இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….!!!!

இன்று அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் வங்க கடலில் நிலைகொண்டுள்ள நிலையில் அது ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கித் திரும்பும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா – ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் நிலவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை இருக்கும். வங்க பெருங்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |