டெங்குவால், இந்த ஆண்டு தற்போது வரை 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அடுத்து வரும் நாட்களில் பாதிப்பு விகிதம் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்ஆண்டை பொறுத்தவரை ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 3396 பேர் பாதிக்கப்பட்டனர்.
கடந்த செப்டம்பரில் 572 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபரில் அந்த எண்ணிக்கை 616 ஆக் உயர்ந்தது. எனவே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.