தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு அடுத்த மூன்று நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 1ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.