Categories
மாநில செய்திகள்

ALERT: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி…. இன்னும் ஒரு மணி நேரத்தில்…. தமிழகமே அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை தமிழக கரையை நெருங்க கூடும். அதனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என்று எச்சரித்துள்ளது.

Categories

Tech |