மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூதலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் வெட்டையம்பட்டி பகுதியில ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வெட்டையம்பட்டி குளக்கரை அருகில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை அழைத்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் வெட்டையம்பட்டியை சார்ந்த ரெங்கசாமி, முருகானந்தம் என்பதும் அந்தப் பகுதியில் அவர்கள் மது விற்றதும் தெரியவந்தது. உடனே காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.