சோமாலியாவில் அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பினர் ஐ.நா. அதிகாரியை குறி வைத்து நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சோமாலியாவின் தலைநகரான மொகதீசுவில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று ஐ.நா. அதிகாரி பயணித்த காரின் மீது மோதி வெடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பள்ளி மாணவர்கள் 7 பேர் உட்பட 23 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் காரில் பயணித்த ஐ.நா அதிகாரியின் நிலை என்ன என்பது குறித்த தகவல் எதுவும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பினரே ஷரியா சட்டத்தை சோமாலியா நாட்டில் அமல்படுத்தும் நோக்கத்தோடு இதுபோன்ற குண்டு வெடிப்பு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.