Categories
தேசிய செய்திகள்

“ஏஐசிடிஇ கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்”…. பிப். 28-ம் தேதி கடைசி நாள்… உடனே விண்ணப்பிங்க..!!

கேட் அல்லது ஜிபாட் தேசிய நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட் மற்றும் ஜிபாட் எனப்படும் தேசிய நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் கல்லூரிகளில் முதல்நிலை பயிலும் மாணவர்களுக்கு ஏஐசிடிஇ முதுநிலை உதவி தொகை திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதற்கு மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்ப கட்டணம் செய்பவர்கள் வேறு எந்த உதவி தொகையை திட்டத்திலும் நிதியை பெற்றிருக்க கூடாது. நடப்பு ஆண்டில் முதுநிலை சேர்க்கை பெற்ற மாணவர்கள் இந்த உதவித் தொகை பெற https://www.aicte-india.org/schemes/students-development-schemes/PG-Scholarship-Scheme என்ற இணையதளம் மூலம் வரும் பிப்ரவரி 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு, மாணவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு மார்ச் 15-ம் தேதிக்குள் ஏஐசிடிஇ தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

Categories

Tech |