Categories
உலக செய்திகள்

இந்தியா – சீனா எல்லை குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு – படைகளை திரும்பப்பெறுகிறது சீனா!

இந்தியா – சீனா எல்லை குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த வாரம் இரு நாடுகளின் உள்ளூர் தளபதிகள் இடையே 5 முறை பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கேல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அத்துமீறி தன்னுடைய கூடாரங்கள் மற்றும் படைகளை குவித்து வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து எல்லை பிரச்சனை தொடர்பாக பேச்சு வார்த்தை மூலமாக சுமூகமாக தீர்க்க இரு நாடுகளின் வெளி விவகாரங்களுக்கான இணை செயலாளர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு அதன்படி நேற்று லெப்டினட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இந்திய ராணுவத்தின் 14வது படைப் பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழு, சீன ராணுவ உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் இந்தியா – சீனா எல்லையில் அமைதியை நிலைநாட்ட 2 நாடுகளும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது என வெளியுறவுத்துறை தகவல் அளித்துள்ளது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து படைகளை சீனா திரும்பப்பெறுகிறது என தகவல் அளித்துள்ளனர்.

Categories

Tech |