கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிங் கூட்டம் காணொலி மூலம் நடைபெறவுள்ளது.
கடந்த மாதம் சீனாவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் covid 19 குறித்து விவாதிகவிடாமல் தடுக்கப்பட்டது. தலைமையில் இருந்து சீனா விலகிய 3 நாட்களுக்கு பிறகு நிரந்தர உறுப்பு நாடுகள் அல்லாத 10 நாடுகள் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ-விடம் மூடிய கதவுகள் இடையே ஒரு கூட்டத்தை கூட்டி கொரோனா குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தலைமை பொறுப்பில் தற்போது உள்ள டோமினிக் குடியரசு வலியுறுத்தியதை தொடர்ந்து அவசரமாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிங் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் காணொலி மூலம் நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு ஐ.நா பொதுச்செயலாளர் முறைப்படி தேதியை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சீனாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தால் அதை எதிர்கொள்வதற்கு ரஷ்யாவும், சீனாவும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.