Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த விபத்து…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைப்புதூர் பகுதியில் சுடலைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு சந்தனமாரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் சுடலைமுத்து இரவில் நாற்கர சாலையோரம் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது  அவ்வழியாக சென்ற வேன் எதிர்பாராத விதமாக சுடலைமுத்து மீது மோதியது.

இதனையடுத்து சாலையில் தூக்கி வீசப்பட்ட சுடலைமுத்து மீது பின்னால் வந்த ஆம்னி பஸ்சும்  மோதியது. இதனால் சுடலைமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுடலைமுத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |