Categories
அரசியல் சற்றுமுன்

ADMK பொதுக்குழு திடீர் ட்விஸ்ட்; சசிகலாவை மேற்கோள்காட்டி…. இபிஎஸ் முக்கிய வாதம் …!!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில், பொதுக்குழு தொடர்பான நான்கு கேள்விகளுக்கு இபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி இன்று பிற்பகல் மீண்டும் விசாரணை தொடர்ந்தார்.

அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளரை  தேர்வு செய்வதற்காக ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள அதிமுக பொது குழுவிற்கு தடை  கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதிமுக சட்ட விதிப்படி பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை என தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ள நிலையில், தடைகேட்டு தொடர்பட்ட மனுவை மீண்டும் அனுமதிக்கக்கூடாது  என கேட்டுக் கொண்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டிருந்த நீதிபதி, ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தற்போது உள்ளதா ? பொதுக்குழு கூட்டத்தை கூட்ட எத்தனை நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட வேண்டும். பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா ?

பொதுக்குழு நோட்டீஸில் கையெழுத்திடும் அதிகாரம் யாருக்கு உள்ளது ? என நான்கு கேள்விகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு முன் வைத்தனர். இதற்கு விரிவான விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இன்றைய விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்னவாக இருக்கும் ? என்று எதிர்பார்ப்பு எழுந்து இருந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது.

இதில் இபிஎஸ் தரப்பு வைத்த வாதங்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தான் கடந்த இரண்டு  மணி நேரத்திற்கு மேலாக வாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.   நேற்றைய தினம் நீதிபதிகள் எழுப்பி இருந்த நான்கு கேள்விகளுக்கு பதில் அளிக்கக்கூடிய வகையிலே இந்த 2 மணி நேர வாதம் அமைந்திருக்கிறது.

இந்த 2 மணி நேரம் முழுவதுமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு  தங்களுடைய வாதங்களை வைத்திருக்கிறார்கள். இதில் ஒரு முக்கிய  விஷயத்தை நீதிபதி முன்னிலையில் வைத்திருக்கிறார்கள்.ஏற்கனவே 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் இறந்தபோது அதிமுகவினுடைய தலைமை பதவியாக இருக்கக்கூடிய பொதுச் செயலாளர் பதவி காலியானது. அப்போது மீண்டும் ஒரு பொதுச் செயலாளராக சசிகலா கொண்டுவரப்பட்டார்.

சிறிது காலத்திற்கு அவர் தான் அதிமுகவினுடைய பொதுச் செயலாளராக இருந்தார். அப்படி அவர் பொதுச் செயலாளராக கொண்டு வருவதற்கு அப்போது ஒரு பொதுக்குழு கூட்டப்பட்டது. அந்த பொது குழு எந்த அடிப்படையில் நடத்தப்பட்டது ?  என்ற முக்கியமான கேள்வியை எடப்பாடி தரப்பு எழுப்பி இருக்கிறார்கள்.

இந்த கேள்வியின் வாயிலாக பல்வேறு பதில்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. காரணம் சசிகலா அவர்கள் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட காலத்திலேயே பொதுக்குழு கூட்டப்பட்டது. தலைமைக் கழக நிர்வாகிகளால் தான் கூட்டப்பட்டது. அப்போது தலைமை கழக நிர்வாகிகளில் ஒருவராக இருந்த எதிர்மனுதாரராக இருந்த ஓபிஎஸ் தான் கையெழுத்துட்டு இருக்கின்றார்.

ஓபிஎஸ் அப்போது கையெழுத்து இருக்க கூடிய நிலையிலே, அப்போது தலைமை கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்தால் பொதுக்குழு கூடும் என்பது தெரிந்திருக்கக்கூடிய நிலையிலே இப்போது இந்த வழக்கு என்பது தேவையற்றது. ஏனென்றால் தலைமைக்களாக நிர்வாகிகள் அழைப்பு விடுத்தால் பொது குழுவை கூட்டலாம். அந்த பொதுக்குழுவில் முடிவெடுக்கலாம்.

அந்த பொதுக்குழு செல்லத்தக்கதாக அமையும் இதற்கு சான்றுகள் இருக்கின்றது. ஏற்கனவே அதிமுகவில் இப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை எல்லாம் மேற்கோள் காட்டி இப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நீதிமன்றத்திலேயே வாதங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Categories

Tech |